யார் பொய்யர்? (பாகம்-05)

செப்டம்பர் 16, 2007

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பொய்ர் என்றும் புரட்டர் என்றும் ஒரு கூட்டத்தினர் இணையத்தில் அவதுர்றுகளை எழுதியும் பரப்பியும் வருகின்றார்கள் அவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய இணையப் பேரவையின் சார்பாக கொடுக்கப்படும் பதில்களின் தொடரின் நான்காம் பாகம் இது. முதல் நான்கு பாகங்களை வாசிப்பதற்கு (பாகம்-01) , (பாகம் – 02), (பாகம் – 03) , (பாகம் – 04)

www.iiponline.org

பாகம் : 5/5

இவர்களுக்குக் கிடைத்த அந்த ஓரே ஆதாரம் (?)

// அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”

அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இஇறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

சிந்திக்கும் திறனுள்ள மனிதர்களே! கேளுங்கள் முல்லாக்களிடம்! அந்த சிறுவர்கள் வயது முதிர்வதற்குள் இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிட்டதா? 1400 வருடங்களாகி இந்த இஸ்லாமே பொய் என்று தெரியவில்லையா? முகம்மது பொய் சொன்னான் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? அதுவும் கடவுள் சொன்னதாக சொல்லி பொய்களை சொல்லியிருக்கிறான் என்பதை உணர முடியவில்லையா? ஏன் உங்களால் இந்த பொய்யை விட்டு வர முடியவில்லை? ஏன்? //

தங்களின் கோர சிந்தனையில் உதித்த அக்மார்க் பொய்களை மொழி பெயர்ப்பாக கட்டவிழ்த்துவிட்டு அதிலிருந்து விவாதம் வைத்துள்ளனர். மேற்கண்ட இந்த ஹதீஸ் இறுதித்தீர்ப்பு நாளைப் பற்றிச் சொல்லவில்லை. மாறாக ஒரு குழுவின் மரணத்தைப் பற்றி சொல்கிறது. இப்படித்தான் இவர்களின் அபத்தக்கட்டுரை முழுவதும் பொய்களும் அவதூறுகளும் மடைதிறந்த வெள்ளமாய் காட்சியளிக்கிறது. ஒரு துறையில் ஒருவர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றால் அத்துறையைப் பற்றிய அறிவு அவரிடம் முழுமையாக இருக்கவேண்டும். தன்னைப் படைத்த இறைவனையே பிரித்தறிந்து சரியாக உணர முடியாத இவர்கள், நபி நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளை, தங்களை ஹதீஸ்கலை வல்லுனர்களாக எண்ணிக்கொண்டா ஆய்வு செய்ய கிளம்பியிருக்கிறார்கள்?

இந்த ஹதீஸை ஆய்வு செய்வதற்கு முன்னால் மறுமை நாளைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை முதலில் இவர்கள் விளங்கி இருக்க வேண்டும். அல்லாஹ்வைத்தவிர இறுதிநாளைப் பற்றிய ஞானம் எவருக்கும் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதில் எவருக்கும் என்பதில் நபி (ஸல்) அவர்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் அடங்குவர். எனவே நபி (ஸல்) அவர்களுக்கும் மறுமை எப்போது வரும் என்பது தெரியாது. இதை நபி (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள்.

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 31:34)

நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)

(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் ‘அது எப்போது வரும்?’ என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர், அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்’ (அல்குர்ஆன் 79:42-45).

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள் நீர் கூறும் ”அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது (அல்குர்ஆன் 7:187).

இப்போது விஷயத்திற்கு வாருங்கள். இவர்கள் தான்தோன்றித் தனமாக மொழிபெயர்ப்பு செய்துள்ள அந்த ஹதீஸைதான் தங்களிடமுள்ள பலமான ஆதாரமாக வெளியிட்டு அவர்களின் ஆக்கத்தில் பலமுறை பதிந்திருக்கின்றனர். இதை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் பொய்யன் யார்? என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேற்கண்ட இந்த அறிவிப்பு நபிவழிக் கோர்வைகளான புகாரியில் 6511 வது ஹதீஸாகவும், முஸ்லிமில் 7335 வது அறிவிப்பாகவும் பதிவாகியுள்ளது. அந்த ஹதீஸூம் அதன் சரியான மொழி பெயர்ப்பும் பின்வருமாறு

ஸஹீஹூல் புகாரி 6511 வது ஹதீஸின் அரபி மூலம்

حدثني صدقة أخبرنا عبدة عن هشام عن أبيه عن عائشة قالت كان رجال من الأعراب جفاة يأتون النبي صلى اللهم عليه وسلم فيسألونه متى الساعة فكان ينظر إلى أصغرهم فيقول إن يعش هذا لا يدركه الهرم حتى تقوم عليكم ساعتكم قال هشام يعني موتهم

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் சொன்னதாக ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் எப்போது’ என்று கேட்பார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ‘இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்கள் மீது மறுமை சம்பவித்துவிடும்’ என்று கூறுவார்கள். இங்கு ‘மறுமை’ (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனுக்கு அடுத்த அந்தஸ்து பெறும் ஸஹீஹூல் புகாரியில் இதைப்பற்றிய தெளிவான விளக்கம் இருந்தும், இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்களே ஸாஅத் என்பது மரணத்தைக் குறிக்கும் என்று அந்த ஹதீஸிலேயே தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் வேண்டுமென்றே திட்டமிட்டு இவர்கள் உண்மையை மறைத்து எழுதியுள்ளார்கள்.

மேற்படி ஹதீஸ் புகாரியில் ‘சக்கராத்துல் மௌவ்த்’ அதாவது மரணவேளை, (அல்லது மரணத்தின் வேதனை) என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் புகாரி (ரஹ்) அவர்களைப் பொருத்தவரை ஒரு ஹதீஸ் எந்தக்கருத்தைச் சொல்கிறதோ அதன் கருத்தைத்தான் அதற்குத் தலைப்பாக இட்டு பதிவு செய்வார்கள். உதாரணமாக தொழுகையைப் பற்றி வரும் ஹதீஸ்கள் அனைத்தையும் தொழுகையின் வாயில் எனப் பொருள்படும் ‘பாபுஸ் ஸலாத்’ என்று தலைப்பிட்டு பதிவார்கள். இந்த ஹதீஸை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இறுதி தீர்ப்பு நாளைப் பற்றிய ஹதீஸ்கள் பதியப்பட்டுள்ள தலைப்பில் பதியாமல் மரணத்தைப் பற்றிய செய்திகளை தெரிவிக்கும் ஹதீஸ்களின் வரிசையில் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸஹீஹூல் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹூல் பாரியில் இந்த ஹதீஸைப் பற்றிய முழுத்தகவலும் உள்ளது. அதாவது வெளிக்கிராமத்திலிருந்து மதினா வந்த ஒரு குழுவினர் ‘அஸ்ஸாஅத்’ எப்போது வரும் என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவுகின்றனர். அப்போதுதான் நபிகளார் அக்குழுவிலிருந்த ஒரு சிறுவரை சுட்டிக்காட்டி இவருக்கு வயது முதுமை ஆகும் முன்னர் ‘ஸாஅத்துகும்’ வந்துவிடும் என்கின்றனர்.

இந்த அறிவிப்பில் ‘ஸாஅத்’ ‘ஸாஅத்துகும்’ என்றால் என்ன என்பதை விளங்கிவிட்டாலே இந்த ஹதீஸ் எதைச் சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ‘ஸாஅத்’ என்ற இந்த அரபிச் சொல் நேரம், வேளை, மரணம், இறுதிநாள் என்று பல அர்த்தங்களையும் கொடுக்கும். நபி (ஸல்) அவர்கள் பதிலளித்த ‘ஸாஅத்துகும்’ என்ற அரபி வார்த்தை ‘கும்’ என்ற முற்று பெற்றுள்ளது. ‘கும்’ என்பதற்கு தமிழில் முன்னிலை பன்மையான உங்களுடைய, உங்களின், உங்களுக்கு என்ற பொருளைத்தரும். எனவே ‘ஸாஅத்துகும்’ என்ற இந்த சொல் உங்களுடைய நேரம், உங்களுடைய வேளை, உங்களுடைய மரணம், உங்களுடைய இறுதிநாள் என்று பொருள்படும்.

இப்போது இவர்களின் கூற்றுப் படியே ‘ ஸாஅத்’ என்ற இந்த அரபிச் சொல்லிற்கு இறுதிநாள் என்றே பொருள் வைத்து மேற்கானும் ஹதீஸைப் படியுங்கள். அதாவது வெளிக்கிராமத்திலிருந்து மதினா வந்த ஒரு குழுவினர் இறுதிநாள் எப்போது வரும் என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவுகின்றனர். அப்போதுதான் நபிகளார் அக்குழுவிலிருந்த ஒரு சிறுவரை சுட்டிக்காட்டி இவருக்கு வயது முதுமை ஆகும் முன்னர் உங்களுடைய இறுதிநாள் வந்துவிடும் என்றார்கள் என்று பொருள் அமையும்.

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே! இப்போது விளங்கிக் கொள்ளுங்கள் பொய்யுரைத்தது யார் என்று? ‘ஸாஅத்துகும்’ என்ற அரபி வார்த்தைக்கு உங்களுடைய நேரம், உங்களுடைய வேளை, உங்களுடைய மரணம், உங்களுடைய இறுதிநாள் என்று எந்த வார்த்தைகளை அமைத்தாலும் இந்த ஹதீஸ் அக்குழுவின் மரணத்தை அல்லவா குறிக்கிறது. இணையத்தில் வலைப்பூக்கள் கட்டணமின்றி கிடைக்கிறது என்பதற்காக அதில் வாயில் வந்ததை எல்லாம் உளறிக் கொட்டுவதற்குப் பெயரா ஆய்வு? என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.

இது போன்ற பல பொருள் கொடுக்கும் ஒரு சொல்லை எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த விஷயங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை நேரடியாக அறிந்தவர்கள் அந்த நபித்தோழர்கள். எனவே இவ்வாறான ஹதீஸ்களை அந்நபித்தோழர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அதுபோல நாமும் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பங்களும் வராது.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை நோக்கி இன்று இப்பூமியில் வசிக்கும் எவரும் நூறு வருடங்களுக்குப் பின் உயிரோடு இருக்கமாட்டார்கள் என்ற கருத்துப்படக் கூறினார்கள். அதாவது தானும், தனது தோழர்களும், அன்று பூமியில் பிறந்து இருந்த அனைவரும் நூறு வருடங்களில் மரணமடைவார்கள் என்ற அறிவிப்பாகும் இது. அன்று உயிரோடு இருந்தவர்களுக்கான மரணக்கெடு நூறு வருடங்கள் என்பதைப்போல அந்த குழுவினரின் மரணக்கெடு அச்சிறுவனின் வயது முதிர்வாகும். அதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

கியாமநாளின் பெரிய பத்து அடையாளங்களாக புகை மூட்டம், சூரியன் மேற்கே உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் வருகை, நபி ஈஸா (அலை) வருகை, யஹ்ஜூஜ் மற்றும் மஹ்ஜூஜ் கூட்டம் வருகை, கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபுப் புகுதியில் ஒரு பூகம்பம், பெரும் நெருப்பு ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் இறைவனின் முன்அறிவிப்பாக சொன்னார்கள். இவ்வாறு எவராலும் கணிக்க இயலாத காலத்தில் நிச்சயம் நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளை கியாமநாளின் அத்தாட்சிகளாக அம்மக்களுக்குச் சொன்ன நபி (ஸல்) அவர்கள், அச்சிறுவனின் வயது முதிர்வுதான் மறுமை நாளின் அடையாளம் என்றிருந்தால் தன் கண்ணுக்கு முன்னால் இருக்கும் அச்சிறுவரைத்தான் மறுமைநாளின் முதன்மையான மிகப் பெரிய அடையாளமாக முன்னிலைப்படுத்தி இருப்பார்கள்.

இவ்வாறு கியாமநாள் வருவதற்கு முன்னர் நிகழவிருக்கும் பல அடையாளங்களையும் இறைவனின் முன்னறிவிப்பாகத் தெளிவாக விளக்கிச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் இதில் எந்த ஒரு நிகழ்வும் நடந்திராத அச்சூழ்நிலையில், அச்சிறுவரைக் குறித்து வரும் அந்த ஹதீஸை இவ்வுலக அழிவிற்கு முன்னரிவிப்பாகவோ, அளவுகோளாகவோ சொன்னார்கள் என்று அறிவுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த ஹதீஸ் மறுமைநாளைப் பற்றி சொல்லவில்லை மாறாக அக்குழுவினரின் மரணத்தைப் பற்றிதான் விளக்குகிறது என்றுதான் சாதாரணமாக விளங்குகிறது.

மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பதை நான் அறிய மாட்டேன் என்று போதித்த நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருப்பார்களா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால்,

இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் ‘ஸாஅத்’ என்பது மரணத்தைக் குறிக்கும் என்று கூறியுள்ளதை இவர்கள் கவனித்திருந்தால்,

மேலும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை மரணவேளை என்ற தலைப்பில் ஏன் பதிவு செய்ய வேண்டும் என்று இவர்கள் ஆய்வு செய்திருந்தால், முஹம்மது ஒரு பொய்யன் என்று நிதானமிழந்து, வசை மாறிப் பொழிந்து தங்களைத் தாங்களே இழிவுபடுத்திய அவலநிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

நபி (ஸல்) அவர்களை உண்மையாளர்தான் என்பதை, இஸ்லாத்தை இவர்களைவிட வலிமையாக எதிர்த்த இவர்களின் முன்னோர்களான அபூஜஹ்ல் வகையறாக்களிலிருந்தும் முன்னர் நாம் நிறுவியுள்ளோம். அரபி மொழி பண்டிதர்களாயிருந்த அன்றைய மக்கா மதீனா நிராகரிப்பாளர்கள் கூட இந்த ஹதீஸில் ‘கும்’ என்ற வார்த்தையை வெட்டி எடுத்துவிட்டு குழப்பம் செய்து விவாதிக்க வில்லை. அந்த அன்சாரி சிறுவரின் மரணத்திற்குப் பிறகும் அன்று வாழ்ந்த இறைநிராகரிப்பவர்கள் எவரும் இந்த விஷயத்தில் முஹம்மது பொய் சொல்லிவிட்டார் என்று அவதூறு சொல்லவில்லை. அவர்கள் கூட இந்த ஹதீஸை சரியாக விளங்கியிருந்ததை உணர்கிறோம். எனவே இவர்கள் அந்த அபூஜஹ்ல் வகையறாக்களைவிட, மக்கா குறைஷி காபிர்களை விட, மதீனத்து நயவஞ்சகர்களை விட கொடிய எண்ணம் கொண்டவர்களாக, குறுமதி படைத்தவர்களாக இருப்பதை பார்க்கிறோம். அணுகுண்டைவிட ஆபத்தான அபூஜஹ்லைவிட மோசமான இவர்களின் பொய்களை நல்லெண்ணம் கொண்ட நாம் அனைவரும் அலட்சியம் செய்து ஒதுக்கிவிட கடமைப்பட்டுள்ளோம்.

பகிரங்க சவால்

இஸ்லாம் என்ற இந்த சத்திய மார்க்கம் ஏதோ சென்ற மாதம் துவங்கங்கப்பட்ட ஜாதி சங்கத்தைப் போல எண்ணிக்கொண்டு இஸ்லாத்தை ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று இப்படியொரு அபத்தக்கட்டுரையை வடித்துள்ளார் கட்டுரையாளர். இஸ்லாம் என்பது இதைவிட பல கொடூர வசைமொழிகளையும் கடந்து, தன் மீது ஏவப்பட்ட, கணைகளாய் பாய்ந்த பல சவால்களையும் வென்று 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வுலகில் மேலோங்கி நிற்கிறது. காரணம் இது மனித கற்பனையில் தோன்றிய இதிகாசமோ, இஸமோ அல்ல. அனைத்துலகையும் படைத்த இறைவனால் தன் படைப்பினத்திற்கு வழங்கப்பட்ட முழுமையான வாழ்க்கை நெறி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை பொய்யர் என்பதில் உறுதியாக எவரும் இருப்பார்களேயானால், 1400 ஆண்டுகளாக இவ்வுலகில் எவரும் எதிர்கொண்டு வெற்றி பெறாத வல்ல இறைவனின் அந்த பகிரங்க சவாலையே இவர்களுக்கும் நாம் தொடுத்து முடிக்கிறோம்.

‘இவ் வேதத்தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்களா? ”(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே இதற்குத் துணை செய்ய அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 13 : 11)

முஹம்மது (ஸல்) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள வேதத்தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், அந்த சந்தேகத்தில் உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை யெல்லாம் ஒன்றாக அழைத்து வைத்துக்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். அப்படி நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 2 : 23, 24)

யார் பொய்யர்? (பாகம் -2)

ஆகஸ்ட் 31, 2007

WWW.IIPONLINE.ORG  

இப்பொய்யர்களின் முன்னோர்கள் பற்றி திருக்குர்ஆன்.

எந்த சமுதாயமும் தனக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை பொய்ப்பிக்காமல் இருந்ததில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இறைதூதுச் செய்தியை அவர்கள் சொல்லும் போது ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அவர்களை பொய்யர்கள் என்று கூறி எதிர்க்கவே செய்துள்ளனர். அல்லாஹ்வின் வழிகாட்டலை அலட்சியம் செய்து பரிகசித்தோர் அழிந்த வரலாறுகளையே நாம் அறிகிறோம். இதைத்தான் திருமறைக் குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறது.

திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம். ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்; ”நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை” என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள். (திருக்குர்ஆன் 30 : 58)

நபியே! இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப் பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள். இவ்வாறே இப்றாஹீமுடைய சமூத்ததினரும் லூத்துடைய சமூகத்தினரும் பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள். இவ்வாறே மத்யன் வாசிகளும் முற்பட்டனர். இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்வே முற்பட்டனர். எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்;. என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!) (திருக்குர்ஆன் 22 : 42,43,44)

மேலும் இவர்களுக்கு முன்னிருந்த ஏனைய சமூகத்தவர்களும் இவ்வாறே பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை. ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்) (திருக்குர்ஆன் 34 : 45)

(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. ”பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 6 : 10,11)

உண்மைக்கும் நேர்மைக்கும் ஓர் அழகிய முன்மாதிரி

இஸ்லாத்தின் கொள்கைகளை தங்களின் சூழ்ச்சிகளால் வென்றெடுக்க இயலாது என்பதை மக்கத்து (இறை) நிராகரிப்பாளர்கள் உணர்ந்தே இருந்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தி என்று கூறுவது அனைத்தும் அவர்களின் சொந்த கருத்தல்ல மாறாக அனைத்துலகையும் படைத்த அல்லாஹ்வினால் அருளப்படும் இறைசெய்தியே என்பதை அறிந்து கொண்ட அக்குறைஷித் தலைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இத்தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். நிபந்தனை என்னவெனில் அக்குறைஷித் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அவர்கள் இருக்கும் அவையில் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களோடு அமர்ந்துவிடக்கூடாது என்கின்றனர். முதலில் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அக்குறைஷித் தலைவர்களை இஸ்லாத்தை ஏற்கச்செய்யலாம். பின்னர் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளை அறிந்தபின் தங்களின் நிபந்தனையின் தவறை தாங்களாகவே உணர்ந்து விளக்கிக் கொள்வார்கள் என்ற முடிவு நபி (ஸல்) அவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தது.

அந்த தருணத்தில் குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அவ்வவைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் போன்றவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் சபைக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையைப் பற்றித்தானே குறைஷித்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறனர். இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. ‘அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்’ என்று துவங்கும் அபஸ என்ற அத்தியாயத்தின் முதல் 12 வசனங்களை அல்லாஹ் அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் தன்னை கடுமையாக கண்டிக்கும் இவ்வசனங்களை மறைத்திருக்கலாம். தனது சுயகௌரவத்தை பாதிக்கும் வகையில் இறங்கிய இவ்வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இவ்வுலகிற்கு எடுத்துரைக்கிறார்கள். தனது தோழர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) அவர்களிடம் முகம் சுளித்த அத்தவறுக்காகத்தான் இவ்வசனங்கள் இறங்கியது என்ற காரணத்தையும் கூறுகிறார்கள். இவ்வசனம் இறங்கிய பின்னர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) அவர்களிடம் தனது மதிப்பை அதிகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட உண்மைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாய் திகழ்ந்தவர்களை, அகில உலகிற்கும் அழகிய முன்மாதிரியை எந்த அடிப்படையும் இல்லாமல் பொய்யன் என்று தூற்றுகிறார்கள் என்றால் நாம் இவர்களை என்ன சொல்வது?

இவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்?

இன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும் பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர் என்றால், கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது 25 வயதில் வணிகராகவும் 40 வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா? தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா? உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா? சற்று சிந்தியுங்கள்.

மக்காவிலிருந்து விரட்டப்பட்ட அவர்கள் மதினா சென்ற பிறகு அவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் ஒருசேரப் பெறுகிறார்கள். பைத்துல்மால் என்னும் அரசுக்கருவூலத்திற்கு நிதிகளும் கனிவர்க்கங்களும் வந்து குவிந்தது. ஒரு நாள் சிறு வயது தனது பேரக்குழந்தை ஹஸன் (ரழி) அரசுக்கருவூலத்தில் இருந்த ஒரு பேரீத்தம் பழத்தை தனது வாயில் விட்டுவிடுகிறார். இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரக்குழந்தையின் வாயில் தன்விரலை விட்டு பேரீத்தம் பழத்தை வெளியே துப்பச்செய்து ‘அப்பேரீத்தம் பழம் அரசாங்கத்தின் சொத்து தமக்குச் சொந்தமானதல்ல’ என்று அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய நேர்மையாளரையா இவர்கள் பொய்யன் என்று சொல்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராக ஆட்சி அதிகாரத்திலிருந்தும் அரண்மனை சுகம் காணாமல் இறுதி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணிக்கிறார்கள். இந்த சத்திய இஸ்லாத்தைச் சொல்லி தனக்காக எந்த நிலையிலும் செல்வம் திரட்டவில்லை. அவர்களின் குடும்பத்தினர் அன்றாடம் வயிரார உண்டதில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து அவர்கள் வீட்டில் அடுப்பெறிந்த சரித்திரமில்லை. பல நாட்கள் பட்டினியோடும், உண்ண உணவின்றி வெறும் பேரீத்தம் பழத்தையும் தண்ணீரையுமே உணவாக உட்கொள்ளும் அளவிற்கு ஏழ்மை நிலையிலே வாழ்ந்தார்கள். தனது கவச ஆடையை தன் உணவிற்காக அடமானம் வைத்து அதை மீட்க முடியாத ஏழ்மை நிலையிலேயே அன்றைய மாமன்னராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கின்றார்கள். இத்தகைய பண்பாடுமிக்க சரித்திர நாயகரைத்தான் இவர்கள் பொய்யன் என்று சொல்கிறார்கள். இப்படி பட்டனி கிடந்து நோவதற்காகவா ஒருவர் பொய் சொல்ல வேண்டும்?

நம் இந்திய நாட்டில் ஒருவன் எம்.எல்.ஏ ஆகிவிட்டாலே அவன் போடும் கூத்துக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அன்றைய உலகில் கோலோச்சியிருந்த ரோமாபுரியும் பாரசிகமும் கண்டு நடுங்கிய முஹம்மது (ஸல்) என்ற மாமன்னருக்கு பல்லாக்கு இல்லை, வாயிற்காப்போன் இல்லை. அவர்களுக்கு முன் பின் அடியாட்கள் இல்லை. எவரையும் தனது காலில் விழுவதற்கு அவர்கள் அனுமதித்ததில்லை. மனிதன் காலில் மனிதன் விழும் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்தார்கள். தனக்காக யாரும் எழுந்து மரியாதை செலுத்தக்கூடாது என்றார்கள். மிகச்சாதாரண மனிதன் எதிர்பார்க்கும் புகழைக்கூட வெறுத்தார்கள். கிருத்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை வரம்புமீறி புகழ்ந்தது போன்று என்னை புகழ்ந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்கள். இத்தகைய சீர்திருத்தச் செம்மலைத்தான் இவர்கள் பொய்யன் என்று சொல்கிறார்கள்.

இவர்களின் நரகல் நடைவிமர்ச்சனங்களை பார்வையிடும் நடுநிலையாளர்கள் எவரும் ‘மல்லாந்து படுத்து காரிக்காரி உமிழும் அறிவிலிகளே! உங்கள் மடமைத்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லையா? பார் போற்றும் இம்மனிதப் புனிதரையா நீங்கள் பொய்யன் என்று சொல்கிறீர்கள்? கண்ணாடி முன்னின்று உங்களின் கோர முகத்தை பார்த்துவிட்டா ‘முஹம்மது ஒரு பொய்யன்’ என எழுதினீர்கள்?’ என்று இவர்களைக் காரி உமிழ்வார்கள்.

சாட்டையடிகள் மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்…

யார் பொய்யர்? (பாகம்-1)

ஆகஸ்ட் 31, 2007

WWW.IIPONLINE.ORG  

உண்மைகளின் தாயகம் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 2 : 42)

சமீபகாலமாக இஸ்லாத்தை ஆய்வு செய்கிறோம் பாருங்கள் என்று தமிழகத்தில் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘முஹம்மது ஒரு பொய்யன்’ என்று தலைப்பிட்டு தார்ப்பாயில் வடிகட்டிய தங்கள் பொய்களை கட்டுரையாக வடித்து இணையத்தில் ஏற்றுமதி செய்துள்ளனர். இவர்களின் பித்தலாட்டங்களை தமிழ் கூறும் மக்களுக்குத் தோலுரித்துக் காட்டவே இப்பதில் கட்டுரையை பதிகிறோம்.

பொய்யர்கள் யார்? புளுகுவது யார்?

இவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது.

150 கோடி முஸ்லீம்களின் ஒப்பற்ற தலைவரை நான்கு சுவற்றுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு பொய்யன் என்று வசைமாறி பொழிந்துள்ள அக்கட்டுரையை எழுதிய அன்பருக்கு ஒன்றை சொல்லி வைக்கிறோம். அது ‘உங்களின் நரகல் நடை விமர்சனங்களுக்கு நீங்கள் கூனிக் குறுகும் அளவில் உங்கள்; தொனியிலே எங்களால் விடையளிக்க இயலும் என்றாலும் இஸ்லாம் என்ற பகுத்தறிவு பாசறை அத்தகைய ஒழுக்கத்தை எங்களுக்குக் கற்றுத்தரவில்லை. நீங்கள் இஸ்லாத்தை விளங்கவேண்டும் என்ற அடிப்படையில் திறந்த மனதுடன்; அணுகாததுவரை உங்களால் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளவே இயலாது. இறைவேதமான திருக்குர்ஆனை, அதை நமக்குப் பெற்றுத் தந்த இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, இஸ்லாத்தின் சீரிய கோட்பாடுகளை எப்படியாவது பொய்ப்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு சத்தியத்தை சரியான முறையில் விளங்கவேண்டும் என்ற சிந்தனையில் இஸ்லாத்தை அணுகுங்கள். இல்லையேல் உங்களின் இம்முயற்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கலும்தான் மிஞ்சும்.

நபி (ஸல்) அவர்கள் பற்றி மக்கா நகர் குறைஷிகள்

இந்தியாவில் வாழும் இந்து மக்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஜாதியப் பிரிவுகளால், வர்ணாசிரமத் தத்துவம் என்ற பிரித்தாலும் சூழ்ச்சியால் பிரித்துள்ள பிராமணர்கள் என்ற சிறு கூட்டம், எவ்வாறு தனது சுயநல கௌரவ சுகபோகங்களை அதன்மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறதோ அவ்வாறே இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னால் அந்த அரபுப் பிரதேசத்திலும் ஜாதிய கட்டமைப்புகளால் தலைவர்களாக சிலர் அம்மக்களை ஆட்டிப்படைத்தனர்.

காட்டுமிராண்டி சமுதாயமாக வாழ்ந்த அந்த அரபுப் பிரதேசத்தில், முஹம்மது (ஸல்) அவர்களின் 40 வது வயதில் இஸ்லாம் என்னும் இப்பூரண ஜோதியை அல்லாஹ் அருளினான். இஸ்லாம் தனது குலப்பெருமையையும் இனவேற்றுமையையும் வேறோடு சாய்க்கிறது என்பதை அறிந்த அன்றைய அரபுப் பிரதேசத்தின் தாருந்நத்வா அறிஞர்கள் இஸ்லாத்தை எதிர்த்தனர். இருப்பினும் அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் நம்பிக்கைத் தன்மையில் எந்த சந்தேகத்தையும் கிளப்பவில்லை. இறை மறுப்பிலிருந்த அன்றைய சாதாரண மக்கள் முதல் அபூஜஹ்ல் தலைமையில் அமைந்த அந்த தாருந்நத்வா அறிஞர்கள் வரை முஹம்மது (ஸல்) அவர்களை ஸாதிக் – உண்மையார், வஃத் – வாக்குறுதிக்கு மாறுசெய்யாதவர், அமீன் – நம்பிக்கைக்குறியவர் என்றே அழைத்து மகிழ்ந்தனர். எந்த அளவிற்கெனில் அவர்கள் தங்களின் தீனார் திர்ஹங்கள் மற்றும் விலை மதிப்பில்லா பொருட்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக முஹம்மது (ஸல்) அவர்களை பாவித்தனர். அவர்களின் நேர்மை நாணயத்தின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு உதாரணத்திற்காக வரலாற்றிலிருந்து இரண்டு விஷயங்கள்.

1. நபித்துவத்தின் ஆரம்ப நாட்களில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்திவைப்பதற்காக மக்கா குறைஷித் தலைவர்களை அழைத்து ஓரிடத்தில் ஒன்று கூட்டினார்கள். பிறகு அவ்விடத்திலிருந்த சிறு மலையைக் காண்பித்து ‘இம்மலைக் குன்றிற்குப் பின்னால் ஒரு கூட்டம் உங்களை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நீங்கள் என்னை நம்புவீர்களா’ என்று அக்குறைஷிகளிடம் வினவுகிறார்கள். அதற்கு ஒட்டுமொத்தமாக அந்த குறைஷிகள் ‘முஹம்மதே (ஸல்) நீங்கள் அப்படி சொன்னால் நிச்சயமாக நாங்கள் நம்பியே தீருவோம். ஏனெனில் நீங்கள் ஸாதிக்குல் வஃதில் அமீனாக இருக்கிறீர்கள். அதாவது எங்களில் பொய்யுரைக்காத உண்மையாhளராக, வாக்குறுதிக்கு என்றும் மாறுசெய்யாதவராக, எங்களில் நம்பிக்கைக்குறியவராக இருக்கிறீர்கள்’ என்று விடைபகர்ந்தனர்.

2. மற்றொரு சம்பவம், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முன் இறை இல்லமாம் கஃபா குறைஷிகளால் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. சுவனத்தின் அத்தாட்சிகளில் ஒன்றான ஹஜரல் அஸ்வத் என்னும் கருப்புக் கல்லை கஃபாவில் நிறுவுவதில் அக்குறைஷித் தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடியாமல் விழித்த அந்நேரத்தில் குறைஷிகள் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். அதாவது மறுநாள் காலையில் கஃபாவின் வாசல் வழியாக யார் முதலில் நுழைகிறாரோ அவரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. அக்காலை அவர்கள் எதிர்பார்த்த வாயிலினுல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நுழையவே அக்குறைஷிகள் அனைவரும் நம்மிடையே தீர்பளிக்க சரியான ஆள்தான் கிடைத்திருக்கிறார் என்று பெருமிதம் கொண்டனர். நம்மிடையே இந்த முஹம்மது (ஸல்) நீதமாகவே நடந்து கொள்வார். நாம் இவரை அநியாயம் செய்பவராகவோ அநீதி இழைப்பவராகவோ காணவில்லை என ஒவ்வொரு கோத்திரத்தவரும் தீர்ப்பளிப்பதற்கு முஹம்மது (ஸல்) அவர்களை நிபந்தனையின்றி ஆமோதித்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் போர்வை ஒன்றை கொண்டுவரச் சொல்லி அக்கல்லை அப்போர்வையின் மீது வைத்து, போர்வையின் ஒவ்வொரு முனையையும் ஓவ்வொரு குறைஷித்தலைவரையும் பிடிக்கவைத்து அந்த கல் கஃபாவில் நிறுவப்பட்டது. குறைஷிகளின் அப்பிரச்சனை முடிந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் குறைஷிகள் எதிர்பார்த்த வாயிலினுல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முதல் நபராக அன்று நுழைந்திருந்தாலும், இவர்கள் கூறுவது போல பெரும் பொய்யராக இருந்திருந்தால் இதைச் சொல்லியே நபிகளை அவர்கள் புறக்கணித்திருக்க முடியும். இவர்கள் புளுகுவதைப் போல முஹம்மது (ஸல்) அவர்கள் தனிமனித வாழ்வில் பொய்யராக இருந்திருந்தால் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நீதி சொல்பவராக முஹம்மது (ஸல்) அவர்களை குறைஷிகள் நியமித்திருப்பார்களா? தங்களின் விலைமதிப்பற்ற பொருட்களை அவர்களை நம்பி ஒப்படைத் திருப்பார்களா? உண்மையார், வாக்குறுதிக்கு மாறுசெய்யாதவர், நம்பிக்கைக்குரியவர் என்று அவர்களுக்குப் பட்டப் பெயர் சூட்டியிருப்பார்களா? ‘முஹம்மது ஒரு பொய்யன்’ என்று ஒரு தலைப்பிட்டு கட்டுரை வடித்த மகானுக்கு இந்த சிந்தனை கூடவா இல்லை?

இஸ்லாமிய வரலாற்றை அறிந்த யாருவரும் இவைகளை நன்கு அறிவார்கள் என்றாலும் இச்சரித்திரங்கள் ஏன் இங்கு நினைவூட்டப்படுகிறது எனில் இவர்களைவிட இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கருவறுக்கத் துணிந்த அந்த குறைஷிகள் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் எந்தக்குறையையும் காணவில்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்களோடு வாழ்ந்த அக்குறைஷிகள் நுபூவத்திற்கு முன்னரும் பின்னரும் தனிமனித வாழ்வில் நபி முஹம்மது (ஸல்) அவர்களை உண்மையாளராகவும் வாக்குறுதிக்கு என்றும் மாறுசெய்யாதவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவுமே சான்று பகர்வதைக் காண்கிறோம்.

இஸ்லாத்தின் கோட்பாடான ‘வணங்கத் தகுதி படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே’ என்ற பேருண்மையை ஏற்றுக்கொண்டு விட்டால் அவர்கள் கற்பனையாக தெய்வங்கள் என்று காலங்காலமாக நம்பியவைகளை மறுக்க வேண்டி வரும் என்பதால் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அக்குறைஷிகள் எதிர்த்தனர். தங்கள் பதவி கௌரவம் பாதிக்கப்பட்டதினாலும், ஆண்டாள் அடிமை சாசனத்தை இஸ்லாம் கலைந்து அவர்கள் அச்சமுதாயத்தில் கட்டமைத்த ஜாதிய ஏற்றத்தாழ்வை உடைத்ததினாலும், நிறம் இனம் மொழி வேற்றுமைகளை வீழ்த்தி மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்களே என்பதை போதித்ததாலும் மட்டுமே முஹம்மது (ஸல்) அவர்களை அக்குறைஷிகள் எதிர்த்தனர். இஸ்லாத்தின் அசுர வளர்ச்சி கண்டு பொறுக்காமல் தங்களால் இயன்ற அளவில் புழுதிகளை அள்ளித் தூற்றத் துவங்கினர்.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையாளர்களுக்கெல்லாம் உண்மையாளர், உண்மை என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தியவர்கள், உண்மைக்கு ஓர் அழகிய முன்மாதிரி என்பதை திருக்குர்ஆன் அளிக்கும் சான்றுகள் மூலமும், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும் நம்மால் மிகச்சுலபமாக நிறுவிட இயலும். எனினும் நபி (ஸல்) அவர்களை பொய்யர் என்று எழுதியிருக்கும் குறுமதி படைத்த, எதிலும் நம்பிக்கையற்ற, பொய்களிலும் புரட்டுகளிலும் புரண்டுவாழும் இப்பொய்யர்களுக்கு அந்த நல் உபதேசங்கள் மண்டையில் உறைக்கவா போகிறது? எனவே இஸ்லாத்தை இவர்களைவிட வலிமையாக எதிர்த்த இவர்களின் முன்னோர்களான அபூஜஹ்ல் வகையறாக்களிலிருந்தே முதலில் இங்கு நிறுவுகிறோம்.

சாட்டையடிகள் மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்…

இஸ்லாமிய இணையப் பேரவை எதற்கு?

ஆகஸ்ட் 24, 2007

இஸ்லாமிய இணையப் பேரவை எதற்காக? 

            அளவில்லா அருளும் நிகரில்லா கிருபையும் உடைய இறைவனின் திருப்பெயரால்…

சாந்தியும் சமாதானமும் உலகத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் வழி நெறி பிறலாது தொடர்ந்தோர் மீதும் அந்த ஓரிறையின் பேரருள் என்றும் பொழியட்டுமாக! 

            இவ்வுலகம் வேகமாக இயங்குகிறது கணிணி மையத்தில்!

            இஸ்லாமிய சகோதரர்கள் இன்னுமிருக்கிறார்கள் அறியாமை கோழத்தில்!!

            அகிலனைத்தில் இருக்கும் அன்புச் சகோதரர்களே கண் விழியுங்கள்!!!

            நாங்கள் சொல்வதை சிறிது செவிசாய்த்து கேளுங்கள் 

            இஸ்லாம் இருள் மையமாக்கப்படுகிறது இணையதளத்தில்

            இன்னுமா உறக்கம்? சகோதரா  எழுந்து வா இறைபயணத்தில் 

        இஸ்லாத்தை சிந்தனை ரீதியில் தாக்குதலை தொடுக்கிறது பாசிச சக்திகளின் பாசறை

            இதற்காக அறிவுபூர்வமாக விடை கொடுத்திட உதயமாகிறது இஸ்லாமிய இணையப் பேரவை

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - இது திருமறையின் போதனை

தீமையை தடுக்கக்கூடிய சக்தியிருந்தும் அதை தடுக்காமல் இருந்தால் அதற்கான பாவம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

என்று மார்க்கம் சொல்வதற்கினங்க இதை தாரகமந்திரமாக எடுத்துக்கொண்டு இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான  நச்சு கருத்துக்களுக்கு சத்தியத்தை சாதூர்யமாக எடுத்துக்கூறவும் அறிவுபூர்வமாக விடை கொடுக்கவும் உதயமாகிறது நம் இஸ்லாமிய இணையப் பேரவை.

மார்க்கத்தை மாசுபடுத்த முயலும் இணையங்கள் பல. தங்கள் சிந்தனைக்கு தருகிறோம் அதிலே சில

அசத்தியத்தில் இருப்போரோ அணி திரண்டு ஒன்றாகிவிட்டனர்.

சத்தியத்தில் இருப்போரோ சண்டையிட்டு பிரிந்துகிடக்கின்றனர்.

அப்போது ஆங்கிலத்தில் தான் தாக்குதலைத் தொடுத்தார்கள் அந்த ஆதிக்கச்சக்திகள்.

தற்போது தமிழிலும் தாக்க வந்துவிட்டார்கள் இந்த தறுதலைகள்.

குர்ஆனிய வசனங்களை குளறுபடியாக்கி குற்றம் புரிகின்றனர்.

நபிமொழிகளை நாசவேளை செய்து நக்கல் செய்கின்றனர்.

ஜிகாத் வசனங்களை தவறாக சித்தரித்து தவகல் தருகின்றனர்.

தற்காப்புக்கு செய்த போர்களை தவறாக விளக்கம் கொடுக்கிறார்கள் இந்த தன்னறிவில்லாதவர்கள்.

பாகப்பிரிவினையை பலவாராக பிரித்து இஸ்லாத்தில் ஆனாதிக்கம் என்று தூற்றப்படுகிறது.

மார்க்கம் வாய்மையால் வளர்க்கப்பட்டதல்ல அது வாளால் பரப்பப்பட்டது என்று விதண்டாவாதம் புரிகின்றனர்.

நபியவர்களின் பலதாரமணத்தை பழித்துபேசி தவறான பட்டம் கொடுக்கப்படுகிறது. அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் இளவயது திருமணத்தை இழிவாக பேசப்படுகிறது.

பல புனைப்பெயர்களால் முஸ்லிம் பெயர் வடிவம் கொடுத்து சில கட்டுரைகள் காட்டப்படுகிறது. அதற்கு நான் ஏன் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினேன்என்று சுயவிளக்கமும் கொடுக்கப்படுகிறது

முஸ்லிம் குடும்பங்களில் தகாத உறவு நடப்பதுபோன்று கதைகள் வடிக்கப்படுகிறது. அதை சில இளம்வயது முஸ்லிம் சகோதிரி எழுதுவது போன்றும் சித்தரிக்கப்படுகிறது.

அழைப்புப்பணியில் அன்றாடம் தங்களை அறவழியில் அற்பணித்து கொண்டியிருக்கிறார்கள் நம் இந்திய திருநாட்டில் பலர்.

அப்பணியை அமுக்கிட அதை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி உளவுதுறைக்கு கொடுக்கின்றனர் சில தவறான தகவல்களை பாசிசத்தின் சிலர்

இறைச்சட்டங்களை இழிநிலை ஏற்படுத்தி ஏளனம் புரிகின்றனர் இணையதளத்தில்

நபியவர்களுக்கு உருவம்கொடுத்து  கற்பணை செய்கின்றனர் காமக்கண்ணோட்டத்தில்

 

உன் கண்ணுக்கு முன்னால் தீமை நடந்தால் என்ன செய்ய சொல்கிறது நபிமொழி?

ஆனால் நாம் அதை சிறிதும் கண்டும்காணாமல் இருக்கிறோம் தொழிலே, வீடே கதி!

இஸ்லாத்திற்கு இணையதளத்தில் களங்கம் ஏற்படுகிறது பல பாசிச சக்திகளால்

இஸ்லாமிய சகோதரர்களோ இணையாமலிருக்கிறார்கள் சில இயக்க தயக்கங்களால்

இஸ்லாத்தை இணையத்தில் தேடும்போது பாசிசத்தின் பக்கங்களே முதலில் வருகிறது

நாளைய தலைமுறைக்கு இணையத்தால் இஸ்லாம் தவறான முறையில் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது

இறைவன் அமானத்தாக கொடுக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாத்தை தூய வடிவில் கொடுப்பது நமது கடமையாக இருக்கிறது

முஸ்லீம்களால் இப்பேரவை நிறுவுவதற்கு இத்தீயசக்திகளால் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

            நிச்சயமாக புகழனைத்தும் இறைவனுக்கு

            நல்லாதரவு நல்குவீர் இந்த இஸ்லாமிய இணையப் பேரவைக்கு

            யா இறைவா! தூய எண்ணம் தந்து வெற்றியை கொடுப்பாயாக எமது முயற்சிக்கு.

இஸ்லாமிய இணையப் பேரவை

ISLAMIYA INAYAP PERAVAI

WWW.IIPONLINE.ORG  

சுதந்திர தின சிந்தனை – இஸ்லாமிய இணையப் பேரவை (IIP)

ஆகஸ்ட் 14, 2007

முதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள்

அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?

கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் ‘முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது’ என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் ‘பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?’ என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.

குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.

தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.

அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.

முதல் சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முஸ்லிம் இந்தியர்கள் ஆங்கிலேய பீரங்கியில் குற்றுயிராக கட்டப்பட்டு

ஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். – - குருமூர்த்தி//

முதல் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிடும் திப்புவின் வீரர்கள்

என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

குருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.

மேலும் படிக்க…….

இஸ்லாமிய இணையப் பேரவை

ISLAMIYA INAYAP PERAVAI

சுதந்திர தின சிந்தனை – இஸ்லாமிய இணையப் பேரவை (IIP)

ஆகஸ்ட் 14, 2007

முதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள்

அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?

கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் ‘முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது’ என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் ‘பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?’ என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.

குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.

தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.

அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.

முதல் சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முஸ்லிம் இந்தியர்கள் ஆங்கிலேய பீரங்கியில் குற்றுயிராக கட்டப்பட்டு

ஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். – - குருமூர்த்தி//

முதல் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிடும் திப்புவின் வீரர்கள்

என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

குருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.

மேலும் படிக்க…….

இஸ்லாமிய இணையப் பேரவை

ISLAMIYA INAYAP PERAVAI

Hello world!

ஜூலை 11, 2007

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!


Follow

Get every new post delivered to your Inbox.